தமிழகத்தில் டெங்கு மரணங்கள் தொடர்பாக நகைப்புக்கிடமான அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாறி மாறி கூறிவரும் கருத்துக்கள் : பொதுமக்கள் வியப்பு
Oct 22 2017 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், டெங்கு மரணங்கள் தொடர்பாக நகைப்புக்கிடமான அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாறி மாறி கூறிவரும் கருத்துக்கள் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஆட்சியாளர்களுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பாதிப்புகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு நகைப்புக்கிடமான அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாறி மாறி பேசி வருவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என வாய்கூசாமல் பொய்யுரைத்த அமைச்சர், டெங்குவால் உயிரிழந்ததை நிரூபிக்குமாறு சவால் விடுத்தார்.
இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பியபோது, தான் ஒன்றும் டாக்டர் இல்லை எனக்கூறிவிட்டு, அந்த இடத்திலிருந்து அவசர அவசரமாக வெளியேறியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.