நாகர்கோவிலில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை
Aug 19 2017 9:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 50 லட்சம்
ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில் அடுத்த வடசேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற வசதியாக 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை கட்ட மறைந்த மாண்புமிகு அம்மா உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து கட்டுமான பணிகள் முடிவடைந்து, பல மாதங்கள் ஆகியும் ஆரம்ப சுகாதார நிலையம் இதுவரை திறக்கப்படாததால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். மேலும் கட்டிடம் கேட்பாரற்று இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.