தேனீ வளர்ப்பு மற்றும் தேனீக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நாகர்கோவிலில் விழிப்புணர்வு பேரணி
Aug 19 2017 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக தேனீ தினத்தை முன்னிட்டு, தேனீ வளர்ப்பு மற்றும் தேனீக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நாகர்கோவிலில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மற்றும் தேசிய
தேனீ வாரியத்தின் சார்பில் உலக தேனீ தினம், தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலக தேனீ தினத்தை முன்னிட்டு தேனீ வளர்ப்பு மற்றும் தேனீக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற தேனீ வளர்ப்பு
கருத்தரங்கில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தேனீ விவசாயிகள் பங்கேற்றனர்.இதில் பங்கேற்ற அரசு அதிகாரிகள் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.