கழக பொதுச்செயலாளர் சின்னம்மா வழியில் செயல்பட்டுவரும் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு - கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா தலைமையின் கீழ் மட்டுமே அணி திரளுவோம் என உறுதி
Aug 20 2017 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க. அம்மா துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் அவரது இல்லத்தில் இன்று சந்தித்து மேலூர் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தித்தந்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
கழக பொதுச் செயலாளர் சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, இன்று அவரது இல்லத்தில் கழக அமைப்புச் செயலாளர் திரு.மேலூர் சாமி சந்தித்து,
மேலூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தித் தந்ததற்காக மலர்க்கொத்து வழங்கி நன்றி தெரிவித்தார். அவருடன், அமைப்புச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுமான திரு.பி.பழனியப்பன், திரு.செந்தில்பாலாஜி மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பாலசுப்பிரமணி ஆகியோரும் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள், கழக நிர்வாகிகள் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை திரளாக சந்தித்து வருகின்றனர்.