காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல் அருவியில் படகு சவாரிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கியதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி

Aug 19 2017 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் படகு சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த தடை நீக்கியதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த வாரம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்தொடங்கியது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி தருமபுரி மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்கவும், பெண்கள் குளிக்கவும் தடை விதித்திருந்தது. இதனால் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால், நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. இதனால் 4 நாட்கள் தடை செய்யப்பட்ட படகு சவாரி இன்று பரிசல் துறையிலிருந்து பொம்மச்சிப்பள்ளம், மாமரத்துக்காடு உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் மணல் திட்டு, ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் பரிசல் இயக்கவும், ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00