கழக பொதுச் செயலாளர் சின்னம்மா தலைமையின்கீழ் மட்டுமே அணி திரளுவோம் என கழக சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதி - மடியில் கனம் இல்லாததால் விசாரணை குறித்து எந்த அச்சமும் இல்லை என்றும் பேட்டி
Aug 20 2017 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழக பொதுச் செயலாளர் சின்னம்மா தலைமையின்கீழ் மட்டுமே அணி திரளுவோம் என கழக சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர். தொண்டர்கள் விருப்பத்தின்படியே கழகம் இணைய வேண்டும் என்றும், மடியில் கனம் இல்லாததால், விசாரணை குறித்து எந்த அச்சமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை அடையாறில் உள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக சட்டமன்ற உறுப்பினர்களும், அமைப்புச் செயலாளர்களும் சந்தித்து வருகின்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள், கழக பொதுச் செயலாளர் சின்னம்மா தலைமையின்கீழ் மட்டுமே அணி திரளுவோம் என உறுதிபட தெரிவித்தனர்.
கழகத்திற்கு எதிராக வரும் அனைத்து அறைகூவல்களையும் எதிர்கொண்டு கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெற்றிபெறுவார் என்று கழக கொள்கைப்பரப்பு துணைச் செயலாளர் திரு.நாஞ்சில்சம்பத் தெரிவித்துள்ளார்.