விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மின்சாரம் தாக்கி இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்
Aug 18 2017 6:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மின்சாரம் தாக்கி இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி ஜோதி நாச்சியார் வழக்கம் போல் துணிகளை துவைத்து வீட்டின் அருகே மின்சாரத்தை வீடுகளுக்கு மாற்றிவிடும் மற்றொரு மின்சாரா கம்பிகளின் மீது ஈர துணிகளை காய வைத்துள்ளார். ஏற்கனவே மழை நேரம் என்பதால், விசைத்தறி கூடத்திற்கு செல்லும் உயர் மின்சாரம் கசிந்து கம்பியில் பாய்ந்துள்ளது. இதை அறியாமல் ஈர துணிகளை காயவைத்த போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த மின்சார துறையினர் மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.