நாமக்கல் அருகே தனியார் தொழிற்சாலை அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் கூறி பொதுமக்கள் சாலைமறியல்
Aug 18 2017 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் அருகே தனியார் தொழிற்சாலை அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் கூறி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி கரியபெருமாள் புதூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தேங்காய் சிரட்டை ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்த ஆலை அமைக்கப்பட்டால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே, ஆலையைத் தொடங்க தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சேந்தமங்கலம் - அலங்காநத்தம் பகுதியில் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் எருமப்பட்டி காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.