திண்டுக்கல்லில் 2,500 பள்ளி மாணவ-மாணவியர் கலந்து கொண்டு உருவாக்கிய மூவர்ண தேசிய கொடி
Aug 16 2017 8:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல்லில் 2 ஆயிரத்து 500 பள்ளி மாணவ-மாணவியர் கலந்து கொண்டு உருவாக்கிய மூவர்ண தேசிய கொடி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி, திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி விளையாட்டரங்கில் பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்ற சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டின் தேசியக் கொடியில் உள்ள ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் பனியன் மற்றும் தொப்பி அணிந்து 2 ஆயிரத்து 500 பள்ளி மாணவ-மாணவியர் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்று லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர். இதில் பங்கேற்ற மாணவ- மாணவியர் உள்ளிட்ட அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை ஏற்றனர். இனம், மொழி, சாதி பேதமின்றி அனைவரும் இந்தியர் என்ற ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்த சாதனை முயற்சி நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கணைப்பாளர்கள் தெரிவித்தனர்.