திருச்சியில் சிலம்பாட்ட வீரர்கள் இணைந்து 3 உலக சாதனைகளை நிகழ்த்தும் நிகழ்ச்சி : பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 124 சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்றனர்
May 16 2017 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் சிலம்பாட்ட வீரர்கள் இணைந்து 3 உலக சாதனைகளை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 124 சிலம்பாட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
தமிழர்களின் தற்காப்புக்கலையான சிலம்பாட்டத்தில் உலக சாதனை படைக்கும் விதமாக திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் 3 உலக சாதனைகளை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 124 சிலம்பாட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் முதல் சாதனையாக 124 சிலம்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக 35 நிமிடங்களில் தேசியத் தலைவர்களின் புத்தகங்களை வாசித்து சாதனை நிகழ்த்தினர். 2வது சாதனையாக தேசிய சிலம்பாட்ட விளையாட்டுக்கு தேர்வாகியுள்ள 11 வயது வீராங்கனை பிரியதர்ஷினி, சிலம்பாட்டத்தின் ஒரு வகையான பிரளை என்றும் முறையை 5 நிமிடத்தில் தொடர்ச்சியாக 250க்கும் மேல் செய்து சாதனை நிகழ்த்தினார். 3வது சாதனையாக ஒரு நபருக்கு 12 கிலோ வீதம் ஐஸ்கட்டியின் மீது நின்று, 71 சிலம்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக 30 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தினர். சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு கோப்பை, தங்கபதக்கம், சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.