மே தினத்தையொட்டி, கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 103 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் - குடும்ப நல நிதியுதவியாக மொத்தம் ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு
Apr 30 2017 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மே தினத்தையொட்டி, கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 103 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உழைப்போர் திருநாளாம் மே தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 103 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும்.
இவர்களுக்கான நிதியுதவி, வரும் 4-ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் தலைமைக் கழகத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.