ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்
Apr 30 2017 3:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில், ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் திரு.தோப்பு N.D.வெங்கடாசலம் தொடங்கிவைத்தார்.
பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விஜயமங்கலத்தில், ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்படவுள்ள சாலை விரிவாக்கப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் திரு.தோப்பு N.D.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். மேலும், கம்புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காசி பில்லாபாளையத்தில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கபள்ளி, சர்க்கார் பெரியபாளையம் பகுதிகளில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் பள்ளிக்கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் திரு. தோப்பு N.D.வெங்கடாசலம் பங்கேற்றார்.
நாகை மாவட்டம் பூம்புகார் அடுத்த கீழையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் தொகையினை அமைச்சர் வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, கிள்ளியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 479 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 94 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் ஆயிரத்து 916 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜயகுமார் கலந்துகொண்டார்.
தோவாளையில் 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பூ வணிக வளாக கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.