பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் - விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அடுத்த மாதம் 3- தேதி கடைசி நாள்
May 1 2017 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து கல்லூரிகளும் அடங்கும்.
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர இன்று முதல் 31-ம் தேதிவரை ஆன்லை மூலம் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்க உள்ளது.
மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு ஆன்லைன் பதிவை முழுமை செய்த பின்னர் ஆன்லைன் விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்தபின், அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து, அடுத்த மாதம் 3-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.