தமிழக நலனில் அக்கறை இருப்பதுபோல், தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிக்கிறது - எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்திலேயே அ.இ.அ.தி.மு.க.வை அழிக்க நினைத்த தி.மு.க.வின் முயற்சி முறியடிக்கப்பட்டது - பா.ஜ.க. தலைவர்கள் குற்றச்சாட்டு
Apr 29 2017 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே அ.இ.அ.தி.மு.க.வை அழிக்க நினைத்ததுதான் தி.மு.க. என மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் நிர்வாகத்தை மத்திய அரசு முடக்கி வருவதாக, தி.மு.க.வின் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலேயே அ.இ.அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க.வினர் முயற்சி மேற்கொண்டதாகவும், அது முடியாமல் போனது என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க தேசிய செயலாளர் திரு. ஹெச். ராஜா, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க சுய நலத்திற்காக தமிழக விவசாயிகளின் நலனை கருணாநிதி அடகு வைத்ததாக குற்றம்சாட்டினார்.