கொடைக்கானலில் குளிர், இதமான வெயில் என மாறிமாறி நிலவி வரும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலாப்பயணிகள் குவியத் தொடங்கினர்
Mar 26 2017 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொடைக்கானலில் குளிர் மற்றும் இதமான வெயில் என மாறிமாறி நிலவி வரும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த ஜனவரி மாதம் வரை கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நீடித்தது. இதையடுத்து சற்று வெயில் நிலவியது. இந்நிலையில், கடந்த இருவாரங்களாக பெய்த தொடர்மழையால் தற்போது பகல் பொழுதில் மிதமான பனிக்காற்றுடன் கூடிய வெயில் நிலவி வருகிறது. இந்த இதமான சூழலை அனுபவிக்க அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் வந்த வண்ணம் உள்ளனர். கோடை வெயில் தற்போதே சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ப்ரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் உலா வருகின்றனர். பிரையண்ட் பூங்காவில் இசைக்கேற்ப நடனமாடும் நடன நீரூற்று மற்றும் வண்ண மலர்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு விருந்தளிப்பதாக அமைந்துள்ளது.