ஆர்.கே. நகர் தொகுதியில், அ.இ.அ.தி.மு.க. அம்மா வேட்பாளர் TTV தினகரனுக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு - பெண்கள் ஆரத்தி எடுத்து, 'தொப்பி' சின்னத்திற்கே வாக்களிப்போம் என உறுதி : மாண்புமிகு அம்மா செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றப்படும் - இரட்டை இலை சின்னம் மீட்கப்படும் என டிடிவி தினகரன் சபதம்
Mar 26 2017 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் ஆசியோடும், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவின் வாழ்த்துகளுடனும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திரு. TTV தினகரனுக்கு, பொதுமக்களிடையே ஆதரவு தொடர்ந்து பெருகி வருகிறது. 'தொப்பி' சின்னத்தில் வாக்களித்து, பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் திரு. TTV தினகரனை மகத்தான வெற்றி பெறச் செய்வோம் என இத்தொகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.