நாகர்கோவில் அருகே விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
Mar 26 2017 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகர்கோவில் அருகே விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நடைபெற்ற சாலை விபத்தில், கல்லூரி மாணவிகள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மாணவிகள் பலர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, விபத்தில் பலியான மாணவிகளின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜயகுமார், மாவட்ட ஆட்சியர் திரு. சஜ்ஜன் சிங் சவான் ஆகியோர், உயிரிழந்த மாணவிகளின் வீடுகளுக்கு சென்று, தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர். அதனைதொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கினர்.