சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை - மாணாக்கர்களிடையே அமோக வரவேற்பு
Feb 25 2017 9:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றுவரும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை, மாணவ-மாணவியரிடத்திலும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிகழ்ச்சிகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கிடும் சிறமையான தொகுப்பாளர்களை உருவாக்கும் வகையிலும், இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்களை உருவாக்கிடும் நோக்கிலும், இளந்தமிழர் இலக்கியப் பட்டறைத் திட்டத்தை, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, கடந்த 2012-2013ம் நிதியாண்டில் உருவாக்கினார்.
இப்பயிற்சிப் பட்டறையில், இலக்கணத்தமிழ், கணினித்தமிழ், திரைத்தமிழ், அறிவியல் தமிழ் புதினம், கவிதை, தற்கால இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் துறை சார்ந்த வல்லுநர்களால் ஒரு வாரம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், 5-வது ஆண்டாக, இளம்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிலையம் கடந்த 21ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் மாணவ-மாணவிருக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.