சீர்காழி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து : 40-க்கும் மேற்பட்டோர் காயம் - சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி நேரில் சந்தித்து ஆறுதல்

Feb 25 2017 6:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் சீர்காழி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.வி.பாரதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பழையாறு நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, மடவாமேடு கிராமத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து புதுப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.வி.பாரதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதனிடையே, சேலம் மாவட்டம் ஆத்தூர் புறவழிச்சாலையில் தனியார் கல்லூரி பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். கல்லூரி மாணவிகள் 12 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00