மாண்புமிகு அம்மாவின் மரணம் குறித்து உண்மைக்கு மாறாக பொய்யான தகவல்களை பரப்பி வந்த போலி மருத்துவர் ராமசீதாவை, பெருநகர காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை

Feb 25 2017 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு அம்மாவின் மரணம் குறித்து, உண்மைக்கு மாறாக பொய்யான தகவல்களை பரப்பி வந்த போலி மருத்துவர் ராமசீதாவை, பெருநகர காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் மறைவு குறித்தும், அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், எதிர்பாராமல் கடும் மாரடைப்பு ஏற்பட்டு, அம்மா மறைந்த நிகழ்வுகளை, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவரும் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். இந்த நிலையில், ராமசீதா என்பவர், தான் அப்பலோ மருத்துவமனையில் பணியாற்றியதாகவும், செப்டம்பர் 22-ம் தேதி அம்மா இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார் என்றும் பொய்யான தகவல்களை தொடர்ந்து பரப்பி வந்தார். இதுகுறித்து, அப்பலோ மருத்துவமனை அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ராமசீதாவை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமசீதா மீது, பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மருத்துவர் இல்லை என்பதும், அப்பலோ மருத்துவமனையில் அவர் பணியாற்றியதே இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00