பெரம்பலூர் ஜல்லிக்கட்டு போட்டி : 200-க்கும் மேற்பட்ட காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகள் வென்றனர்
Feb 25 2017 6:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. திருச்சி, புதுக்கோட்டை, சேலம், கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளைகளுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள், வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளை வென்றனர்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியினை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.