அ.இ.அ.தி.மு.க. சார்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் 69-வது பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் - அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு

Feb 25 2017 8:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் கழகம் சார்பில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் 69-வது பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இதில், அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். இக்கூட்டங்களில், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

கரூர் நகர கழகம் சார்பில் சுபாஷ் சிலை அருகே நடைபெற்ற மறைந்த மாண்பு அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், மக்களவை துணை சபாநாயகர் டாக்டர். மு. தம்பிதுரை, அமைச்சர் திரு. M.R. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். இக்கூட்டத்தில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் மறைந்த மாண்புமிகு அம்மாவின் 69-வது பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

திண்டுக்கல் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், மணிக்கூண்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திரு. திண்டுக்கல் C. சீனிவாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர், ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். இதில், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மதுரவாயல் பகுதிக் கழகம் சார்பில், நெற்குன்றத்தில் மறைந்த மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் திரு. கே.ஏ. செங்கோட்டையன், திரு. பா பென்ஜமின் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி நகர கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்று மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா செயல்படுத்திய எண்ணற்ற சாதனை திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். இதேபோன்று திருவள்ளூர், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பெருந்திரளான கழகத்தினர் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு கலந்துகொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை புறநகர் மாவட்ட திருமங்கலம் தொகுதி கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திரு. R.B உதயகுமார் பங்கேற்று மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் சாதனைகளை எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர கழகம் சார்பில், புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர்கள் திரு. P தங்கமணி, டாக்டர் .V. சரோஜா ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் நடைபெற்ற மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திரு. S.P வேலுமணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றிய கழகம் சார்பில், செஞ்சி கூட்ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் திரு. C.V சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் கிழக்கு மாவட்டம் நெய்வேலி நகர கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திரு. எம்.சி சம்பத் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு புறநகர் மாவட்ட கழகம் மற்றும் ஊத்துக்குளி ஒன்றியக் கழகம் சார்பில் நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திரு. K.C கருப்பணன் பங்கேற்று உரையாற்றினார். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருப்பூர் புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், கொழுமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திரு. உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னதாக உடுமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 500-க்கும் மேற்பட்ட எழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், பத்மாவதிபுரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டதில், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

மறைந்த மாண்புமிகு அம்மாவின் 69-வது பிறந்த நாளையொட்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திரு. ஆர். காமராஜ் பங்கேற்று உரையாற்றினார். இதில், ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் சாந்தநாதபுரத்தில் நடைபெற்ற மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் டாக்டர். C. விஜயபாஸ்கர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்று உரையாற்றினர்.

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் திருவானைக்காவலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர்கள் திரு. வெல்லமண்டி என். நடராஜன், திருமதி. எஸ் வளர்மதி ஆகியோர் பங்கேற்று மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா செயல்படுத்திய எண்ணற்ற சாதனை திட்டங்களை எடுத்துரைத்தனர்.

திருச்சி புறநகர் மாவட்ட கழகம் சார்பில், முசிறி, தா.பேட்டை, திருவெறும்பூர் ஆகிய இடங்களிலும் பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர கழகம் சார்பில், அண்ணா சிலை முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர் சேவூர் திரு. எஸ் ராமசந்திரன் கலந்து கொண்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செய்யார் நகர கழகம் சார்பில் ஆரணி கூட்டுசாலையில் உள்ள எம்.ஜி.ஆர் திடல் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்ட கழகம் சார்பில், கள்ளக்குறிச்சியில் மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில், அரசு தலைமைக்கொறடா தாமரை திரு. எஸ். ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் சிங்கப்பெருமாள் கோயில் எம்.ஜி.ஆர் சிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்போரூர் ஒன்றியக் கழகம் சார்பில் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்று உரையாற்றினர். இக்கூட்டத்தில், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் நகரம் மற்றும் ஒன்றியக் கழகம் சார்பில், பிள்ளையார்பாளையம், சிறுகாவேரிபாக்கம் பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று தாம்பரம் நகர கழகம் சார்பில் தாம்பரம் பாரதி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நெல்லை புறநகர் மாவட்ட கழகம் சார்பில், அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் அரண்மனை முன்பு மறைந்த மாண்புமிகு அம்மாவின் 69-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்று மாண்புமிகு அம்மாவின் சாதனைத் திட்டங்களை எடுத்துரைத்தனர்.

இதேபோன்று கீழக்கரை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்று உரையாற்றினர். ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

ஈரோடு மாநகர் மாவட்டம், பெரியார் நகர் பகுதி கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தஞ்சை மாநகர கரந்தை பகுதிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00