மாநிலம் முழுவதும் பள்ளியில் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் விலையில்லா மிதிவண்டிகள் : தமிழக அரசுக்கு மாணவ-மாணவியருக்கு நெஞ்சார்ந்த நன்றி
Feb 25 2017 8:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசு உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
மதுரை கீழவாசல் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 586 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு வழங்கினார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3 மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவ - மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் திரு. S.P. வேலுமணி வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம், நத்தக்கடையூர், படியூர், முத்தூர், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 9 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், ஆயிரத்து 271 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் திரு. உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதேபோல், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.