நீட் தேர்வை தமிழகத்தில் நடத்தக்கூடாது என வலியுறுத்தி, வரும் 27-ம் தேதி பிரதமரை சந்திக்கப்போவதாக முதலமைச்சர் பழனிசாமி பேட்டி - அத்திக்கடவு - அவிநாசி குடிநீர்த் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி
Feb 24 2017 9:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக வரும் 27-ம் தேதி பிரதமரை சந்தித்து பேசவுள்ளதாக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் மரணத்தில் மர்மம் ஏதும் இல்லை என்றும், அரசியல் நோக்கத்துடன் பிரச்னை பெரிதுப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியை வரவேற்பதற்காக முதலமைச்சர் திரு. பழனிசாமி கோவைக்கு வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கோரி, பிரதமரை வரும் 27-ம் தேதி சந்தித்து பேசவிருப்பதாக தெரிவித்தார். மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் மரணத்தில் மர்மம் ஏதும் இல்லை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் இப்பிரச்னை பெரிதுப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டம், அத்திக்கடவு அவிநாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.