தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நெல்லையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
Jan 20 2017 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நெல்லையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஆவடையனூரில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றுச்சூழல் மாசுபாடு என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மழைநீர் சேகரிப்பு, பசுமைவீடு, சோலார் விளக்கு, சுகாதார கிராமம், நீர்நிலைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் காட்சிகளை மாணவர்கள் தத்ரூபமாக செய்து காண்பித்தனர். பல்வேறு தலைப்புகளில் வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.