தமிழகத்தில் உறுதியாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டம் - நாளைகுடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்தவுடன அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு
Jan 20 2017 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜல்லிகட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் நாளை ஒப்புதல் அளிக்க உள்ளார் என்றும் தமிழகத்தில் ஜல்லிகட்டு உறுதியாக நடைபெறும் என்றும் முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். தொடர்ந்து முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு நடைபெற அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார். தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாக அப்போது தெரிவித்த பிரதமர், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு மேற்கொள்ளும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து, உடனடியாக ஜல்லிக்கட்டு நடைபெற அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் டெல்லியிலேயே தங்கி நடவடிக்கை மேற்கொண்டார். அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக இன்று காலை முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார். இந்நிலையில், சென்னை திரும்பிய முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் தமிழகத்தில் ஜல்லிகட்டு உறுதியாக நடைபெறும் என்றும் தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்கு குடியரசு நாளை ஒப்புதல் அளிக்க உள்லார் என்றும் தெரிவித்துள்ளார்.