கைத்தறி மற்றும் துணிநூல்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நூற்பாலைகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது
Jan 20 2017 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நூற்பாலைகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், அமைச்சர் திரு. ஓ.எஸ்.மணியன் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் இயங்கும் 6 கூட்டுறவு நூற்பாலைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பள்ளிக் குழந்தைகளுக்கான விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள உற்பத்தி இலக்கின்படி, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான நூல் வகைகள் தரமான முறையில், குறித்த காலத்திற்குள் உற்பத்தி செய்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு, அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் திரு. ஹர்மந்தர் சிங், கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர்,கூட்டுறவு நூற்பாலைகளின் மேலாண்மை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.