அரசினர் தொழிற் பயிற்சி நிறுவனங்களில் தமிழக அரசால் நடைமுறைப் படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது
Jan 20 2017 7:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கிண்டியில், அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மண்டல இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், முதல்வர்கள் கலந்துகொண்டனர். தமிழக அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி உள்ளிட்டவை, அரசினர் தொழிற்பயிற்சிநிலையங்களில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்றும், இதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், மாநில அளவிலான செய்முறை படைப்புத்திறன் போட்டியில் தேர்ச்சி பெற்ற 5 தொழிற்பிரிவுகளை சேர்ந்த பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் சேர்த்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும் அமைச்சர் வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.