கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் K. அசோக்குமாரின் தாயார் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல்
Jan 20 2017 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. K. அசோக்குமாரின் தாயார் மறைவுக்கு, கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கிருஷ்ணகிரி மாவட்டக் கழக அவைத்தலைவரும், கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கே. அசோக்குமாரின் தாயார் திருமதி யசோதா அம்மாள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.
தாயாரை இழந்துவாடும் அன்புச் சகோதரர் திரு. அசோக்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.