நெல்லை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 3,521 புரோட்டகள் தயாரித்து சமையல் கலைஞர் சாதனை
Jan 9 2017 11:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டத்தில் சமையல் கலைஞர் ஒருவர், 24 மணி நேரத்தில் 3,521 புரோட்டகள் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தான் சார்ந்த சமையல்கலையில் ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என முயற்சி செய்து வந்தார். இந்நிலையில், தொடர்ச்சியாக 24 மணி நேரத்திற்கு பரோட்டா தயாரித்து சாதனை படைக்க வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி, 7-ம் தேதி காலை 8 மணிக்கு பரோட்டா தயாரிக்க ஆரம்பித்து, 8-ம் தேதி காலை 8 மணி வரை 3,521 பரோட்டக்களை தயாரித்து சாதனை படைத்தார். சுமார் 215 கிலோ மாவைக் கொண்டு அவர் இந்த சாதனையை செய்து முடித்தார். இந்த முயற்சி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுக்காக செய்யப்பட்டதாக ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர், சிங்கப்பூரில் 4 பேர் சேர்ந்த 10 மணி நேரம் இதுபோன்ற சாதனையை மேற்கொண்டனர். ஆனால் தனி மனிதனாக 24 மணி நேரம் முயன்று ராஜேந்திரன் செய்த இச்சாதனைக்கு, பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.