21 லட்சம் கைவிரல் பதிவு ஓவியம் வரைந்து திருப்பூர் பள்ளி மாணவ - மாணவிகள் கின்னஸ் சாதனை - போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் முழுமையான கல்வி அறிவை வலியுறுத்தி நடவடிக்கை
Dec 27 2016 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் முழுமையான கல்வி அறிவை வலியுறுத்தி திருப்பூரில் பள்ளி மாணவ - மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 21 லட்சம் கைவிரல் பதிவு ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் ஆயிரத்து 240 மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து இந்த சாதனையை நிகழ்த்தினர். 14 மணி நேரத்தில், 44 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட பேனர் ஒன்றில், 21 லட்சம் கைவிரல் ஓவியங்களை பதிவு செய்து, போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் முழுமையான கல்வி அறிவு என்கிற விழிப்புணர்வு வாசகம் வரைந்து மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை நிகழ்த்திய மாணவ, மாணவிகளுக்கு ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.