"துக்ளக்" பத்திரிகையின் நிறுவன ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான சோ.ராமசாமியின் உடல் சென்னை பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம்
Dec 7 2016 9:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த சோவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். தமிழக ஆளுநர் திரு.வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு.ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு.த.முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி, நடிகர்கள் திரு.ரஜினிகாந்த், திரு.சிவகுமார், திரு.எஸ்.வி.சேகர், திரு. விஷால், இயக்குநர் திரு.பாரதிராஜா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து, மறைந்த சோ.ராமசாமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சென்னை பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.