சென்னை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடலுக்கு, லட்சக்கணக்கான அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி : முதலமைச்சரின் மறைவால் இந்திய துணைக்கண்டமும், உலகிலுள்ள ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயமும், மீளாத் துயரில் ஆழ்ந்தது
Dec 7 2016 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடலுக்கு, லட்சக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் மறைவு, தமிழகம் மற்றும் ஒட்டுமொத்த உலகத்தமிழ் சமுதாயத்திற்கும் பேரதிர்ச்சியையும், சோகத்தையும் அளித்துள்ளது.
கடல் அலையென திரண்டுவந்த லட்சக்கணக்கான பொதுமக்களும், அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், நேற்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று, தங்கள் மகத்தான தலைவருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
செல்வி ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கழகக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.