முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேரில் அஞ்சலி - தேசத்தின் அடையாளச் சின்னமாகத் திகழ்ந்தவர் என புகழாரம்
Dec 6 2016 9:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலலிதாவுக்கு குடியரசுத்தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடலுக்கு, அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை டெல்லியிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் குடியரசுத்தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி புறப்பட்டார். நடுவானில் விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதையடுத்து, விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது. இதனையடுத்து வெறொரு விமானத்தில் மீண்டும் சென்னை புறப்பட்ட குடியரசுத்தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி, சென்னை விமானநிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்திற்கு வந்த குடியரசுத்தலைவர், கார் மூலம், ராஜாஜி அரங்கிற்கு சென்றார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் முப்படை வீரர்களும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உடலுக்கு மரியாதை செலுத்தினர்.