விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உயர் மின் அழுத்த கோபுர விளக்கு : செயல்பாட்டினை அமைச்சர் தொடங்கி வைத்தார்
Dec 4 2016 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் உயர் மின் அழுத்த கோபுர விளக்குகளின் செயல்பாட்டினை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் அமைந்துள்ள செங்கமலாநாச்சியார்புரம், ஆணையூர், சாமிநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து உயர் மின் அழுத்த கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. இந்த மின் விளக்குகளின் செயல்பாட்டினை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் திரு.கே.டி. ராஜேந்திபாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.