கிராம சுகாதார செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று 600 செவிலியர்களுக்கு பதவி உயர்வு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்
Dec 4 2016 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிராம சுகாதார செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று, 600 செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, அச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அமைச்சர் திரு. துரைக்கண்ணு, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிராம சுகாதார செவியர்களின் கோரிக்கையை ஏற்று, RBSK திட்டத்தின் கீழ் 385 பகுதி சுகாதார செவிலியர் பணியிடங்களை ஏற்படுத்தி, அரசாணை வெளியிட்டுள்ளதுடன், உடனே கலந்தாய்வு நடத்தி 600 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.