முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க சென்னை ஆலந்தூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசித்த குடும்பங்களுக்கு நாவலூரில் வீடுகள் ஒதுக்கீடு : புதிய வீட்டில் தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்
Oct 28 2016 9:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, சென்னை ஆலந்தூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசித்த குடும்பங்களுக்கு நாவலூரில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய வீட்டில் தீபாவளியை உற்சாகத்துடன் அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் ஆலந்தூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசித்து வந்த 35 குடும்பங்கள் தங்களுக்கு வீடுகள் ஒதுக்கி தரும்படி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், குடிசை மாற்றுவாரியம் சார்பில், நாவலூர் விரிவாக்க திட்டத்தின் கீழ், அவர்களுக்கு வீடுகள் ஒதுக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். சாலையோரம் வசித்த 35 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதன்மூலம் புது வீடுகளில் குடிபெயர்ந்த அவர்கள், தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். தங்கள் வாழ்க்கைத் தரம் உயர வழிவகுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.