தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, ஆரோக்கியமாக வாழ ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகள் : விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கன்னியாகுமரியில் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணி
Oct 28 2016 9:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, ஆரோக்கியமாக வாழ ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கன்னியாகுமரியில் நடைபெற்ற பேரணியில், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் பேரணி நடைபெற்றது. ஆயுர்வேதம் கூறும் வழிமுறைகள் மற்றும் சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்தப் பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.