புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதியில் நாராயணசாமி போட்டியிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
Oct 28 2016 7:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதியில் நாராயணசாமி போட்டியிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், நாராயணசாமி போட்டியிடவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் சட்டப்பேரவை உறுப்பினர் அல்லாத நாராயணசாமி, முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். 6 மாத காலத்திற்குள் அவர் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், அவர் போட்டியிடுவதற்காக நெல்லித்தோப்பு தொகுதியில் இருந்து வெற்றிபெற்ற திரு. ஜான்குமார், MLA பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில், நாராயணசாமி போட்டியிடுகிறார். இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஜான் குமாரை நாராயணசாமியும், காங்கிரஸ் மேலிடமும் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாகவும், இதற்காக அவருக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும், எனவே நெல்லித்தோப்பு தொகுதி காலியாகவுள்ளதாக புதுச்சேரி சட்டமன்ற செயலாளர் அறிவித்ததில் தவறு இழைத்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.