முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் மிகுந்த முன்னேற்றம் : முதலமைச்சரின் உடல்நிலையையும், சிகிச்சையையும், மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணிப்பு
Oct 28 2016 8:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிறப்பு மருத்துவக் குழுவினர் முதலமைச்சரின் உடல்நிலையையும், சிகிச்சையையும்தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. சிறப்பான சிகிச்சைகளைத் தொடர்ந்து, முதலமைச்சர் உடல்நிலையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு வாழ்த்து
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மிகச்சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பூரண குணம் பெற்று வீடு திரும்புவார் என்றும், தொடர்ந்து மக்கள் நலப்பணிகளை மேற்கொள்வார் என்றும், அப்பலோ மருத்துவமனைக்கு வருகை தந்த பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.