முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி, சிறு விசைத்தறி கூடங்களுக்கு 750 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் : குடும்ப சேமிப்பு உயர்ந்திருப்பதாக விசைத்தறியாளர்கள் பலரும் மகிழ்ச்சி

Oct 26 2016 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்தபடி, சிறு விசைத்தறி கூடங்களுக்கு 750 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் வழங்கப்படுவதால், தங்களின் குடும்ப சேமிப்பு உயர்ந்திருப்பதாக விசைத்தறியாளர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தான் அளித்த வாக்குறுதிப்படி சிறு விசைத்தறி கூடங்களுக்கு 750 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் வழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள விசைத்தறியாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் கிடைப்பதால், அவர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிப்பாளையம், மொடச்சூர், குருமன்தூர், நம்பியூர் உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள நெசவுக்கூடங்களில் விசைத்தறிகள் அமைக்கப்பட்டு, நெசவுத்தொழில் நடைபெற்று வருகிறது. 750 யூனிட் வரை தமிழக அரசுக்கு வழங்கும் விலையில்லா மின்சாரம் மூலம் தங்களுடைய குடும்ப சேமிப்பு பெரிதும் உயர்ந்திருப்பதாக விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00