நெல்லை மாவட்டத்தில் நாட்டு மருந்து உட்கொண்டு 3 பேர் உயிரிழந்த விவகாரம் : சித்த மருத்துவ குழுவினர் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு இரண்டு போலி மருத்துவர்கள் கைது
Oct 26 2016 1:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டத்தில் நாட்டு மருந்து உட்கொண்டு 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சித்த மருத்துவ குழுவினர் 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டு, இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த அழகப்பபுரம் பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நாட்டு மருந்தை உட்கொண்ட 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, போலி மருத்துவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து தென்காசி, பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சித்த மருத்துவ அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வைத்திய சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் திருமலாபுரத்தைச் சேர்ந்த இரண்டு போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.