கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலையொட்டி அங்கு அனைத்துக் கட்சி கூட்டம்
Oct 26 2016 1:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலையொட்டி, அங்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று கரூரில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் திரு.கோவிந்தராஜ் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் செலவின பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டு அரசியல்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.