தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு வகைகள் தயாரிப்புப் பணி மும்முரம் - பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
Oct 26 2016 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீபாவளி பண்டிகையொட்டி இனிப்பு உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஆடைகள், ஆபரணங்கள், பட்டாசுகள், இனிப்புகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இனிப்பு உள்ளிட்ட பலகாரங்கள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில், முறுக்கு, முந்திரி கொத்து, லட்டு, பால் அல்வா, மைசூர்பாகு, ஜாங்கிரி போன்ற இனிப்பு வகைகளை தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த இனிப்பு வகைகளை பொதுமக்கள் தற்போதே முன்பதிவு செய்து வாங்கி செல்வதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. உற்பத்தி விலைக்கும், தள்ளுபடி விலைக்கும் கிடைப்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளதால், பட்டாசு உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி ஆகிய நகரங்களில் மலிவு விலையில், தரமான பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.