வடகிழக்கு பருவமழை வரும் 30-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல் - அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் ஆந்திர கடற்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்

Oct 26 2016 6:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகிழக்கு பருவமழை வரும் 30-ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு. பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை வரும் 30-ம் தேதி தொடங்க சாதகமான சூழல் உருவாகி இருப்பதாக தெரிவித்தார். வங்கக்கடலில் உருவான கியாண்ட் புயல் அடுத்த 3 நாட்களில் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்லக்கூடும் என்றும், கரையை கடப்பது குறித்து தற்போது தகவல் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, தமிழக மீனவர்கள் அடுத்த 3 தினங்களுக்கு ஆந்திர கடற்பகுதியை நோக்கிச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் கழுகுமலையில் 4 சென்டிமீட்டரும், பாம்பனில் 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00