புதுச்சேரியில் கைப்பற்றப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்
Oct 26 2016 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் கைப்பற்றப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சிலை கடத்தல் வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட தீனதயாளன் என்பவரிடம், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், புதுச்சேரியைச் சேர்ந்த புஷ்பராஜன் என்பவரும் சிலை கடத்தலில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி கோலாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 50 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த 11 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வீட்டில் தங்கி இருந்த ரஞ்சித்குமார் என்பவரையும் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னைக்கு அவர் அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். மேலும், சிலை கடத்தலில் தொடர்புடைய புஷ்பராஜையும் போலீசார்தேடி வருகின்றனர்.