முதல் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் - தூத்துக்குடி பகுதியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன் - முதலமைச்சருக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
Oct 1 2016 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்தி வரும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் மூலம், தூத்துக்குடி மின்பகிர்மான வட்டத்தில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இதற்காக, அவர்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மனமாற பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள் போன்றோர் பாதிப்படையக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பதவியேற்றவுடன் கையெழுத்திட்ட முதல் 5 மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றாக, அனைவருக்கும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், ஏழை - எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி வெள்ளம் பாய்ந்துள்ளது.
இத்திட்டத்தின்படி, தூத்துக்குடி மின்பகிர்மான வட்டத்தில் மட்டும் சுமார் 3 லட்சத்து 157 மின் நுகர்வோரும் 300 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ், 488 கைத்தறி நெசவாளர்களும் 750 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ், 57 விசைத்தறி நெசவாளர்களும் பயனடைந்து வருகின்றனர். தங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் விதமாக கட்டணமில்லா மின் திட்டத்தை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.