கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கடற்கரை கிராமத்தில், 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டுள்ளதால், கடற்கரை கிராமங்களுக்கு மீண்டும் போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது
Oct 1 2016 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி கடற்கரை கிராமத்தில் 21 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் கடந்த 2013-ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பாலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெருதவியாக இருக்கிறது. பல கிராமங்களை இணைக்கும் பாலம் பொதுமக்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது. இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.