தூத்துக்குடியில் தொடங்கியுள்ள மாபெரும் புத்தக கண்காட்சி - 100 அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஏராளமான படைப்புகள்
Oct 1 2016 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில், தூத்துக்குடியில் தொடங்கியுள்ள புத்தக கண்காட்சியில் ஏராளமான படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
தூத்துக்குடியில் முதல்முறையாக தொடங்கியுள்ள இந்த புத்தக கண்காட்சியில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக பிரியர்களின் வருகையை அதிகரிக்கும் வகையில், 25 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 10 நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், அறிவியல், கலை இலக்கியம், அரசியல், நாவல், சிறு கதைகள் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாபெரும் புத்தக கண்காட்சி புத்தக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.