பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கன்னியாகுமரியில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
Oct 1 2016 11:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வுகள் முடிவடைந்துள்ளன. தற்போது விடுமுறை தினம் என்பதால், மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள், நண்பர்கள் ஆகியோருடன் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகுகளில் சென்று பார்வையிட்ட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் நீண்டநேரம் கடலில் குளித்து மகிழ்கின்றனர்.